![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhv-EtDpj-YejucWv8bnK6seMEuL4cevRYgFG-PtnYMRBvMWrTxtEFBThJy_Zcu7jlv4-q9j8XphfP0gkzEa_hrojU2rhIc8AJIKF10QB628C7gD6BbOpsOTipTjotajRIJcw0Jji1Pg4w/s1600/avatar.jpg)
இப்படம் எல்லாரையும் பயமுறுத்தக்கூடிய படமாக இருக்காது. எல்லாரும்
மகிழ்ச்சியாக குடும்பத்தோடு பார்க்கக்கூடிய படமாக இருக்கும். பிரம்மாண்டமாக
தயாரித்து இப்படத்தை வெளியிடும் தயாரிப்பாளர்கள் ஸ்ரீதர் நாராயணன்,
எஸ்.சிவசரவணன் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் சினிமாவில் நுழையும்போது நிறைய பேர் வந்தாங்க. அதில் பல பேர்
காணாமல் போயிட்டாங்க. 15 வருடமாக சினிமாவில் நான் இருக்கிறேன் என்று
நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. ‘ஆவிகுமார்' வெளியான பிறகு என்னுடைய
இமேஜ் மாறும்.
‘ஆவிகுமார்' படத்திற்கு விஜய் ஆண்டனி, ஸ்ரீகாந்த் தேவா இருவரும்
இசையமைத்திருக்கிறார்கள். நான் ஹீரோவாக மட்டும் நடிக்க மாட்டேன். பெரிய
நடிகர்கள் படத்தில் நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தாலும் நடிப்பேன். வில்லன்
வேடம் கூட ஓகேதான்.
இனிமேல் வருடத்திற்கு இரண்டு படங்கள் கொடுக்க முடிவு செய்துள்ளேன்.
நல்ல கதைகளை கேட்டு வருகிறேன். ‘காக்கா முட்டை' போன்ற நல்ல கதைகள் கொண்ட
படங்களையும் தயாரிக்க இருக்கிறேன்," என்றார்.